Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடிப்போம்’ - மில்லர் எச்சரிக்கை

’இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடிப்போம்’ - மில்லர் எச்சரிக்கை
, புதன், 7 அக்டோபர் 2015 (16:23 IST)
டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கூறியுள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலானா 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
 
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. 3ஆவது போட்டி நாளை கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள டேவிட் மில்லர், “நாங்கள் மாபெரும் கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம்.
 
நீங்கள் சொல்வது போல், வேகமும், நம்பிக்கையும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பெரிய விஷயம். எங்களுடைய முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் இருந்தது என்று நினைக்கிறேன். மேலும், நாளை வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு மேல்நிலைக்கு வர முயற்சிப்போம்.
 
தொடரை 2-0 என்ற முன்னிலையுடன் கொல்கத்தாவுக்கு வருவது பெருமையாக உள்ளது. தொடரை வென்றது உண்மையில் பெரிய விஷயம். இங்கு வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடனும், எங்களுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டும் வந்தோம்.
 
டி-20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வீரர்களை கொண்ட அற்புதமான அணியாகும். இந்த வெற்றியின் மூலம் அதிக தன்னம்பிக்கையுடன் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னேறி செல்வதற்கான உத்வேகத்தை அளிக்கும்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil