வர்ணனையாளராக அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (18:57 IST)
கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற டேவிட் வார்னர் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
 
சர்வதேச போட்டியில் இருந்து தடைவிதிக்கப்பட்ட வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி அளித்தது. இதனையடுத்து, வார்னர் கனடாவில் வரும் ஜூன் 28ம் தேதி நடக்கவுள்ள ஒரு உள்ளூர் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

 
 
இதற்கிடையே இவர் ஆஸ்திரேயா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் வர்ணையாளராக செயல்படவுள்ளார். இந்த போட்டி வரும் ஜூன் 16ம் தேதி கார்டிஃபில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments