Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்… முன்னாள் வீரர் நம்பிக்கை!

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:39 IST)
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அரசியல் காரணங்களால் இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டியைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யுனீஸ் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும் வல்லமை கொண்டது எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில் “முன்பெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் அதிகமான போட்டிகளில் விளையாடுவோம். அதனால் எந்த அழுத்தமும் இல்லை. ஆனால் இப்போது இந்தியாவோடு பாகிஸ்தான் அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணியை வெல்லும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments