Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்..! ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்..! பிசிசிஐ அறிவிப்பு..!

Senthil Velan
சனி, 10 பிப்ரவரி 2024 (11:34 IST)
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட்  போட்டிகளில் இருந்தும், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.
 
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்:
 
எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: 
 
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ஆர் அஷ்வின்  , ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது.  சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! திணறும் போலீசார்.! பழைய குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிப்பு..!!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments