Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலி அபார சதம்; இந்தியா 299 ரன்கள் குவிப்பு

விராட் கோலி அபார சதம்; இந்தியா 299 ரன்கள் குவிப்பு
, வியாழன், 22 அக்டோபர் 2015 (17:41 IST)
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி, விராட் கோலியின் அபார சதத்தால் 299 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
இதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 21 [4 பவுண்டரிகள்] ரன்கள், ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, ரஹானே இணை தென் ஆப்பிரிக்கா தாக்குதலை திறமையாக எதிர்கொண்டனர்.
 
பின்னர் விராட் கோலி அரைச் சதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ரஹானே 52 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்தது.
 
அடுத்து கோலியுடன் ரெய்னா இணைந்தார். அப்போது இந்திய அணி 26.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்திருந்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 112 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார். இதனைத் தொடர்ந்து ரெய்னாவும் தனது அரைச்சதத்தைக் கடந்தார்.
 
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஸ்டெய்ன் பிரித்தார். ரெய்னா 53 ரன்கள் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய அணி 44.5 ஓவர்களில் 266 ரன்கள் குவித்திருந்தது.
 
இதனால் இந்திய அணி 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தோனி களமிறங்கிய வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
பின்னர், ஹர்பஜன் சிங் (0), தோனி (15) என அடுத்தடுத்து 500 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, ஸ்டெய்ன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil