Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது - கவாஸ்கர் புகழாரம்

விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது - கவாஸ்கர் புகழாரம்
, செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:16 IST)
விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதோடு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் (115, 141) சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் பல சாதனைகளை அந்த ஆட்டத்தில் அவர் புரிந்திருந்தார்.
 
 
இது குறித்து அவர் கூறும்போது, ”ஆஸ்திரேலிய தொடரில் தோனி தான் கேப்டன். இதனால் கேப்டன் பதவி எந்த கேள்வியும் எழுப்ப தேவையில்லை. எஞ்சிய 3 டெஸ்டுக்கும் தோனி தான் தலைவர். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுளள்ளார். வீராட் கோலி தொடர்ந்து கேப்டனாக இருக்க வேண்டும் என்று தேர்வு குழு தோனியிடம் சொன்னது கிடையாது.
 
கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையில் தவறு இல்லை. ஆனால் ரோகித்சர்மா ஆட்டம் இழந்தபிறகு டிராவுக்காக ஆடி இருக்க வேண்டும். வெற்றி பெற முடியாத பட்சத்தில் ஆட்டத்தை ‘டிரா’ செய்வதே சிறந்ததாகும்.

Share this Story:

Follow Webdunia tamil