Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை கிரிக்கெட்: நன்றி தெரிவித்த விராட் கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட்: நன்றி தெரிவித்த விராட் கோலி
, சனி, 2 ஏப்ரல் 2016 (18:01 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.


 
 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய இந்தியா தோல்வியை தழுவினாலும், பெரிதாக விமர்சிக்கப்படவில்லை. இந்த ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதிலும் விராட் கோலியின் ஆட்டம் அபாரம்.
 
உலகக் கோப்பை தொடர் முழுவதும் விராட் கோலி தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா. இதனையடுத்து விராட் கோலி தனது இண்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், தன்னோடு விளையாடிய சக வீரர்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
 
வெற்றியும் தோல்வியும் சகஜம் தான் ஆனால் எந்த போட்டியானாலும் அதன் நினைவானது மறக்க முடியாதது. போட்டிகளில் செய்த தவறுகள் எதிர்வரும் போட்டிகளில் தொடராதவாறு தங்களது ஆட்டத்தை உயர்த்துவோம் என கூறியுள்ளார்.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கியதில் இருந்தே ஆதரவு அளித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய விராட் கோலி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என உறுதியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil