Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியிலிருந்து மும்பைக்குக் குடிபெயரும் விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:13 IST)
அனுஷ்கா ஷர்மாவிற்காக மும்பையில் குடியேற விராத் கோலி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு இத்தாலி நாட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் விராட் கோலி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா சர்மா உடனான திருமண புகைப்படத்தை வெளியிட்டார். உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21-ம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26-ம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
திருமணத்துக்குப் பின்பும் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கப்போவதால் திரைப்படங்களில் நடிக்க வசதியாக அனுஷ்கா ஷர்மா மும்பையில் தங்கியிருக்க வேண்டும். எனவே விராட் கோலி டெல்லியிலிருந்து மும்பைக்கு குடியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்