Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி நிருபரை திட்டிய விவகாரம்: எனக்கு எதுவும் தெரியாது என அஸ்வின் கருத்து

கோலி நிருபரை திட்டிய விவகாரம்: எனக்கு எதுவும் தெரியாது என அஸ்வின் கருத்து
, வெள்ளி, 6 மார்ச் 2015 (09:58 IST)
கோலி குறித்து எழுந்த சர்ச்சையை பற்றி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

 
இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி பெர்த்தில் நடைபெற்ற வலை பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு அறைக்கு திரும்புகொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு பத்திரிகை செய்தியாளரை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வசை பாடியுள்ளார் கோலி. தன்னையும், தனது காதலி குறித்தும் வெளிவந்த செய்திகளுக்கு அவர் தான் மூலக்காரணம் என நினைத்து திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் வேறு செய்தியாளர் என்று தெரிந்ததும் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார். பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கோலிக்கு கண்டங்கள் வந்த வண்ணம் உள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுகையில், கிரிக்கெட் விளையாட்டுகளின் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு சேர்க்க வேண்டியது ஊடகத்தின் பொறுப்பாகும் என்றார். கோலி குறித்து எழுந்துள்ள சர்ர்சையில் உண்மையிலேயே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்றார். எனவே இதுகுறித்து கருத்து கூற ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil