Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேச தொடர் சர்ச்சை: குமுறும் கோலி

வங்கதேச தொடர் சர்ச்சை: குமுறும் கோலி
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (16:31 IST)
வங்கதேச தொடரில் அரங்கேறிய சில சர்ச்சைகளுக்கு, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச தொடரில் இந்திய வீரர்களிடம் ஏற்பட்ட குழப்பமே தோல்விக்கு காரணம் என கோலி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தோனிக்கும் கோலிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் ஒருசாரார் கருத்து தெரிவித்துவந்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து இலங்கை செல்லும் முன் நிறுபர்களுக்கு கோலி கூறுகையில், வங்கதேச தொடர் குறித்து எழுந்த அனைத்து சர்ச்சைகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. மேலும் களத்தில் வகுத்த வியூகங்களை இந்திய அணியால் சரியாக வெளிபடுத்த  முடியவில்லை என்று மட்டுமே கூறினேன். 
 
எனினும் இதன்காரணமாக பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறிவிட்டது என கூறினார். எப்பொழுதும் நாட்டுக்காக விளையாடுவதே எனது லட்சியம் என்று கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil