Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

vinoth
திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:22 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பயிற்சியின் போது விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக பந்துகளை அடித்துள்ளார். அப்படி அவர் அடித்த சிக்ஸ் ஒன்று மைதானத்தின் ஓய்வறைய சுவரை பதம் பார்த்துள்ளது.

இது சம்மந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அதனால் இந்த தொடரில் இருந்தாவது அவரின் டெஸ்ட் ஃபார்ம் மீண்டும் வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments