Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலி, சோயப் அக்தர் என்ன பேசினார்கள் தெரியுமா?

விராட் கோலி, சோயப் அக்தர் என்ன பேசினார்கள் தெரியுமா?
, புதன், 13 ஏப்ரல் 2016 (19:25 IST)
தற்போது கிரிக்கெட் உலகில் புதிய ஜாம்பவானாக உருவெடுத்து வருபவர் விராட் கோலி. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் உலக கிரிக்கெட் ரசிகர்களால் எப்படி பேசப்பட்டதோ, அதே போல் விராட் கோலியும் பேசப்பட்டு வருகிறார்.


 
 
தனது அதிவேக பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த ராவல்பண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் தான் வைத்த கோரிக்கை ஒன்றை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
 
அந்த பேட்டியில் சோயப் அக்தர் கூறியபோது, முகமது செஷாத், உமர் அக்மல் போன்ற பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்கள் இந்தியாவின் விராட் கோலியை போல் திறமை கொண்டுள்ளனர். ஆனால் தங்கள் திறமையை சரியாக பயன்படுத்தி ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதாக கூறினார்.
 
மேலும் நான் விராட் கோலியை சந்தித்த போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஆலோசனை கூறலாமே என்றேன். அதற்கு பதில் அளித்த கோலி “பாகிஸ்தான் வீரர்களை சந்திக்கும் போது உலகத்தின் உள்ள எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவேன், ஆனால் கிரிக்கெட்டை பற்றி பேச மாட்டேன். பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil