Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது.. வருண் சக்ரவர்த்தி ஓபன் டாக்!

vinoth
சனி, 15 மார்ச் 2025 (14:19 IST)
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த தொடரில் மிகச்சிறப்பான பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ர்வர்த்தி. கடைசி நேரத்தில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்ற அவர் மொத்தம் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்களில் அவர் தனக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து வருண் பேசியுள்ளார். அதில் “எனக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் உள்ளது. ஆனால் என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்தது அல்ல.  என்னுடைய ஆக்‌ஷன் மற்றும் பவுலிங் பாணியால் டெஸ்ட் கிரிக்கெட்களில் நீண்ட ஸ்பெல்களை வீச முடியாது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments