Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயதில் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி… சச்சின், யுவ்ராஜ் சாதனை முறியடிப்பு!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (09:42 IST)
பீகாரில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாஜிபூரில் 12 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. பீகாருக்கான அணியில் ரஞ்சிக் கோப்பைக்காக விளையாடவுள்ளார்.  

இதன் மூலம் குறைந்த வயதில் ரஞ்சி கோப்பைக்கு அறிமுகமாகும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் (15 வயது 230 நாட்கள்) மற்றும் யுவ்ராஜ் சிங் (15 வயது 57 நாட்கள்) ஆகிய இருவரும் இந்த சாதனையை படைத்திருந்தனர். இருவருமே இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகள் படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைப் பற்றி பேசியுள்ள வைபவ் “எனக்கு இந்த சாதனைப் பற்றி தெரியவில்லை. நான் பேட் செய்து திரும்பியபோது என்னுடைய அணித் தோழர்கள் எனக்கு இந்த தகவலை சொன்னார்கள். நான் சச்சின் மற்றும் யுவ்ராஜ் சிங் போன்ற சாதனையாளர்களின் சாதனையை முறியடித்து விட்டதாக கூறினார்கள். எனக்கு அது பெருமையாக உள்ளது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments