Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமும் விலக, அவருக்கு பதில் ஷாகின் அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்களாக உமர் குல் மற்றும் சயித் அஜ்மல் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியோடு டெஸ்ட் தொடரை டிசம்பர் மாதத்தில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!

என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments