Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனிக்கு நேரம் சரி இல்லை; கோலியை கேப்டனாக்குங்க- சொல்கிறார் ஜோசியர்

தோனிக்கு நேரம் சரி இல்லை; கோலியை கேப்டனாக்குங்க- சொல்கிறார் ஜோசியர்

தோனிக்கு நேரம் சரி இல்லை; கோலியை கேப்டனாக்குங்க- சொல்கிறார் ஜோசியர்
, வியாழன், 17 மார்ச் 2016 (16:09 IST)
இந்தியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தற்போதையை இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்ல முடியாது என ஜோசியர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.


 
 
தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கும் என அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மும்பையை சேர்ந்த கிரீன்ஸ்டோன் லோபோ என்றா ஜோதிடர், இந்தியா தோனி தலைமையில் விளையாடினால் கோப்பையை வெல்ல முடியாது என கூறியுள்ளார்.
 
தோனியின் வெற்றி பயணம் முடிந்து வருவதாக கூறிய அவர், அவருக்கு பதிலாக விராட் கோலியை கேப்டனாக்கி அவர் தலைமையில் விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். இந்த உலக கோப்பை போட்டியில் பாப் டூ பிளாசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக ஜோசியர் கிரீன்ஸ்டோன் லோபோ கூறியுள்ளார்.
 
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், எளிதாக வெற்றி பெற வேண்டிய இந்திய அணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஜோசியர் சொன்னது பலித்து விடுமோ என்ற பயத்தில் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil