’சென்னையில் மனைவிக்கு சுய நினைவு இழப்பு’- பாகிஸ்தான் முன்னாள் வீரர் உருக்கம்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:42 IST)
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவ்வப்போது, கிரிக்கெட் வீரர்கள் பற்றி கருத்துகள் கூறி வரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

அதில், 2009 ஆம் ஆண்டு என் மனைவியுடன் சிங்கப்பூர் செல்லும்போது, விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறக்கப்பட்டது.

அப்போது, என் மனைவி திடீரென்று சுய நினைவை இழந்தார். அந்தச் சூழ் நிலையில், என்னிடம் இந்திய விசாவும் இல்லை; சென்னை விமான நிலைய அதிகாரிகள், விசா வேலைகளை நாங்கள் பார்க்கிறோம்…உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர். நான் அழுதுவிட்டேன்…..அந்த நாளை என் வாழ் நாளில் எப்போதும் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவரது சுய சரிதை புத்தகமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments