Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:28 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நின்றது. அரசியல் காரணங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பைக்காவும் பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து சொல்லி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதாம். இது சம்மந்தமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments