Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:28 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நின்றது. அரசியல் காரணங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பைக்காவும் பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து சொல்லி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதாம். இது சம்மந்தமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

ருத்துராஜ், ரச்சின் அதிரடி அரைசதம்.. தோனிக்கு பில்டப் பாட்டு- மும்பையை வீழ்த்திய சி எஸ் கே!

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments