Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் கைதா? - ஜிம்பாப்வேயில் பரபரப்பு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (12:01 IST)
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியதாக வெளியான சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
இது குறித்து அங்குள்ள ஊடகங்கள், ‘ஜிம்பாப்வேயில் உள்ளூர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால், ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ஆர்.மசாக்கு கைது செய்யவிடாமல் தடுக்க முயற்சித்ததாகவும்’ செய்திகள் வெளியிட்டன.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் நிர்வாகம், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த சம்பவத்தில் எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளது.
 
ஆனால், இந்தியா- ஜிம்பாப்வே தொடரின் விளம்பரதார நிறுவனம் ஒன்றின் நிர்வாகி தான் கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. இவர் தங்கி இருந்த அதே விடுதியில் இந்திய வீரர்களும் தங்கி இருந்ததால் குழப்பம் நிழவியதாக தெரிகிறது.
 
அதே சமயம், அந்த நிருவன நிர்வாகியும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் அப்பாவி என்று நிரூபிக்க டி.என்.ஏ. சோதனைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
 

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

அடுத்த கட்டுரையில்