Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை கிரிக்கெட் டி20 போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் டி20 போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
, திங்கள், 14 மார்ச் 2016 (19:09 IST)
உலகக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர்-10 போட்டிகள் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாக்பூர் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


 
 
இந்த உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வெல்லும் அணியாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணியாக தோனி தலைமையிலான இந்திய அணி பார்க்கப்படுகிறது. இவர்கள் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை நாளை எதிர் கொள்வதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
44900 ரசிகர்கள் அமரும் நாக்பூர் விசிஏ ஜம்தா ஸ்டேடியத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. போட்டியில் வெற்றிவாகை சூட இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
கடந்த 8 ஆம் தேதியே உலகக் கோப்பை போட்டி தொடங்கி விட்டாலும், முக்கிய அணிகள் பங்கேற்கும் சூப்பர்-10 போட்டி நாளை முதலே ஆரம்பிக்கிறது. நாளை முதல் கிரிக்கெட் திருவிழா தான் ரசிகர்களுக்கு.

Share this Story:

Follow Webdunia tamil