Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக கோப்பை: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி ரத்து !

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:23 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் டி-20 உலகக் கோப்பை தொடர் நடந்து வரும்  நிலையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த  நிலையில், மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது டி-20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு மழை அடிக்கடி குறிக்கிடுவதால், போட்டி தொடங்குவதிலும், போட்டிககளுக்கு இடையேயும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த  நிலையில், இன்றைய  சூப்பர் 12 சுற்றில்  மெல்போர்ன் மைதானத்தில் பிற்பகல் 1;30 மணிக்கு  இங்கிலாந்து –ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி நடக்க இருந்த நிலையில் மழையின் காரணமாக டாஸ் போட தாமதம் ஆனது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழையால் இன்றைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு,  இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலையிலும் மெர்போர்னில் மழையால், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் இந்த அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments