Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட் நியூஸ்… கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்.. தோல்வியில் இருந்து மீட்பாரா?

vinoth
வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:51 IST)
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரின் மிகவும் பலம்மிக்க அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் மற்றும் வலுவான பவுலிங் இருந்தும் கடந்த மூன்று சீசன்களாக சொதப்பி வருகிறது. இன்னும் இந்த சீசனில் வெற்றியை ருசிக்காத நிலையில் வரும் ஞாயிறன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அந்த அணிக்கு ஒரு நல்ல செய்தியாக அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரண்மாக தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி எடுத்து வந்த அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் ஞாயிற்றுக் கிழமை போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments