ரிஷப் பண்ட்டை நான் தோனியுடன் டெல்லியில் சந்தித்தேன்… பரபரப்பை ஏற்றிய சுரேஷ் ரெய்னாவின் பேச்சு!

vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:39 IST)
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். தோனி சென்னை அணிக்காக அன்கேப்ட் ப்ளேயராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கேப்டன்கள் அணிகளால் கைவிடப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டு இருப்பது எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் அவர் மிகவும் மதிப்பு மிக்க வீரராக மற்ற அணிகளால் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு வருவார் என ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர்.

அதற்கு தூபம் போடுவது போல முன்னாள் சி எஸ் கே வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு கருத்தைப் பேசியுள்ளார். அதில் “சமீபத்தில் டெல்லியில் தோனியை சந்தித்த போது அவரோடு ரிஷப் பண்ட்டும் இருந்தார். யாரோ ஒருவர் விரைவில் மஞ்சள் ஜெர்ஸியில் வரப்போகிறார் என்று நினைக்கிறேன்” எனப் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments