Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூதாட்ட வழக்கு விடுதலை: வீரர்கள் மீது தவறு இல்லை - ரெய்னா

சூதாட்ட வழக்கு விடுதலை: வீரர்கள் மீது தவறு இல்லை - ரெய்னா
, செவ்வாய், 28 ஜூலை 2015 (09:43 IST)
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது தவறும் ஒன்றும் இல்லை என அதிரடி வீரர் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் அண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அன்கீட் சவான் ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறி இவர்களை விடுதலை செய்தனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரெய்னா தனது மனைவியின் சொந்த கிராமத்திற்கு சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக நாகேஸ்வர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரெய்னாவிடம் சூதாட்ட வழக்கு விடுதலை குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், சூதாட்ட விவகாரம் குறித்து கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றார். மேலும் இதுபோன்ற புகார்கள் வீரர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தாது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil