Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

vinoth
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (07:29 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணிக்கு இலக்காக 162 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது, இதனால் இந்த போட்டி மூன்று நாட்களில் முடியவுள்ளது.

இந்நிலையில் சிட்னி மைதானம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “எப்போதும் இந்திய மைதானங்களை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் குறை சொல்வார்கள். ஆனால் சிட்னியில் முதல் நாளில் மைதானத்தில் இருந்த புற்களைப் பார்த்திருந்தால் மாடுகள் மேயத் தொடங்கியிருக்கும். அன்று நடந்ததைப் போல ஒரே நாளில் 15 விக்கெட்கள் விழுந்திருந்தால் அதைப் பெரிதாக்கி இருப்பார்கள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments