Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் தொடரை கோலி தவிர்க்க வேண்டும் - கவாஸ்கர்

ஒரு நாள் தொடரை கோலி தவிர்க்க வேண்டும் - கவாஸ்கர்
, சனி, 16 மே 2015 (13:05 IST)
வருகிற வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து கோலி விலக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் பங்குபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வீரர்களின் பெயர் பட்டியலும் விரைவில் வெளிவரவுள்ளது.
 
இந்நிலையில் இத்தொடரின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரரான கோலி விலக வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், தொடர்ச்சியாக கோலி, அஸ்வின் போன்ற வீரர்கள் களத்தில் விளையாடி வருவதால் அவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு வழங்க வேண்டும். தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு சற்று ஓய்வு கிட்டியுள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil