Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி: விராட் கோலி கேப்டனாக நியமனம்

Webdunia
புதன், 22 அக்டோபர் 2014 (11:46 IST)
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், விராட் கோலி புதிய கேப்டனாக செயல்படுவார்.
சம்பள பிரச்சனைக்காரணமாக எழுந்த சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்தனர். இதற்கு பதில் ஏற்பாடாக இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. 
 
இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாறாக விராட் கோலி அணியை வழிநடத்துவார்.
 
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம், விராட் கோலி(கேப்டன்), ஷகீர் தவான், ரகானே, ரெய்னா, ராய்டு, சாஹா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஷ்ரா, முரளி விஜய், வருண் அரோன், அக்சார் படேல் ஆகியோர் உள்ளனர்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments