Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி: விராட் கோலி கேப்டனாக நியமனம்

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி: விராட் கோலி கேப்டனாக நியமனம்
, புதன், 22 அக்டோபர் 2014 (11:46 IST)
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், விராட் கோலி புதிய கேப்டனாக செயல்படுவார்.
சம்பள பிரச்சனைக்காரணமாக எழுந்த சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்தனர். இதற்கு பதில் ஏற்பாடாக இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. 
 
இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாறாக விராட் கோலி அணியை வழிநடத்துவார்.
 
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம், விராட் கோலி(கேப்டன்), ஷகீர் தவான், ரகானே, ரெய்னா, ராய்டு, சாஹா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஷ்ரா, முரளி விஜய், வருண் அரோன், அக்சார் படேல் ஆகியோர் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil