Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின், கோலி, டோனிக்குப் பிறகு அந்த சாதனையைப் படைக்கும் இந்திய வீரர் ஷுப்மன் கில்தான்!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:33 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 92 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இப்போது அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 830 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாபர் ஆசாம் 824 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு தரவரிசையில் முதல் இடம் பிடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments