Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் 10 விக்கெட்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.. இங்கிலாந்து பவுலர் நம்பிக்கை!

vinoth
திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:48 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து  இரண்டாவது இன்னிங்ஸை முன்னிலையோடு தொடங்கிய இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு இலக்காக 192 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன.

மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை இந்த சூழ்நிலையில் இருந்தும் தங்களால் வெல்ல முடியும் என இங்கிலாந்து பவுலர் ஷோயப் பஷீர் கூறியுள்ளார். அதில் “ஆடுகளம் மெல்ல மெல்ல சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் எப்படி பந்துவீசினார்கள் என்பதை கவனித்தோம். அதுபோல  நாங்களும் நாளை (இன்று) ஹீரோவாக முடியும். எங்களால் 10 விக்கெட்களையும் வீழ்த்த முடியும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments