Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பைனலுக்கு வரவேண்டும்… ஆசைப்படும் பாகிஸ்தான் வீரர்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:03 IST)
இந்திய அணி பைனலுக்கு வந்து மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்கவேண்டும் என ஆசைப்படுவதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையின் முதல் இரு போட்டிகளை தோற்ற இந்திய அணி இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ‘தனிப்பட்ட முறையில் இந்தியா பைனலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதி மீண்டும் பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும். அப்படி நடந்தால் அது பிரம்மாண்டமான கிரிக்கெட்டாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments