Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் கோலி ஓய்வு பெறவேண்டும்… சோயிப் அக்தர் சொல்லும் காரணம்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:05 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி டி 20 போட்டிகளில் ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் உச்சகட்ட பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசியது கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து இப்போது மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி “கோலி டி 20 உலகக்கோப்பையோடு இந்த வடிவில் ஓய்வை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவரால் மற்ற வடிவங்களில் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியும். தொலைநோக்கு பார்வையில் கோலி இந்த முடிவை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments