விராட் கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்… சோயிப் அக்தர் கருத்து!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (08:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டுமென சோயிப் அக்தர் பேசியுள்ளார்.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி சமிபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பலரும் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று அதை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் “கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும். அவர் இந்த போட்டிக்காக பயன்படுத்திய ஆற்றலில் மூன்று ஒரு நாள் போட்டி சதங்களை அடித்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். முன்பே இவர் இந்த கருத்தை ஒருமுறைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments