இப்படி ஆயிட்டாரே ஷிகர் தவான்: மீண்டும் ஆட்டத்திலிருந்து விலகினார்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (09:41 IST)
ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் காயம் பட்ட ஷிகார் தவான் நியூஸிலாந்து போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகார் தவான். கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டு ஆட்டத்திலிருந்து விலகினார். பிறகு தொடர்ந்து அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதும், காயம் பட்டு ஆட்டத்திலிருந்து விலகுவதுமாக இருந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான ஆட்டத்தில் மீண்டும் காயம்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலகினார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா மோதவிருக்கும் சூழலில் அந்த அணியிலிருந்து விலகியுள்ளார் ஷிகார் தவான்.

இப்படி தொடர்ந்து அவர் காயம்படுவதும், வெளியேறுவதுமாக இருப்பது நல்லதல்ல என கிரிக்கெட் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஷிகர் களம் இறங்குகிறார் என்றாலே ஆர்வத்தோடு பார்த்த ரசிகர்கள் இப்போது அடிபடாமல் திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments