Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லை…” பிசிசிஐ முடிவை சாடிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (09:51 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான்  முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “கடந்த ஒரு ஆண்டாக இரண்டு நாடுகளிலும் நல்லுணர்வை ஏற்படுத்திய நிலையில் ஏன் ஜெய் ஷா இந்த அறிக்கையை வெளியிடுகிறார். இந்த முடிவு இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபம் இன்மையைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments