Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 110 சதவீதம் தயாராக இருப்பார்…” ஷாகீன் அப்ரிடி குறித்து ரமீஸ் ராஸா தகவல்!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (09:12 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் 6 வாரகாலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது. மேலும் அவர் லண்டனுக்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் இம்மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில்  காயத்தால் ஓய்வில் இருந்து வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடரில் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு ஷாகீன் அப்ரிடி 110 சதவீதம் தயாராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஸா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments