Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் முதுகெலும்பு கோலி… நான் அவரது ரசிகர்- பாக் பந்துவீச்சாளர் கருத்து!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:37 IST)
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி தான் கோலியின் ரசிகர் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவை ஐசிசி தொடரில் வென்றது. இந்த போட்டியில்ச் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய பேட்டிங் தூண்களை சாய்த்தார். இந்திய அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற பாகிஸ்தான் அணியுடனான தோல்வி முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த போட்டி குறித்து பேசியுள்ள ஷாகீன் அப்ரிடி ‘எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாடினார்கள். எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் விளையாடிய விதம் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது. நான் வீசிய எண்டில் லெக் பகுதியில் பவுண்டரி எல்லை சிறியதாக இருந்தது. நான் வேகமாக வீசி இருந்தால் கோலி ரன் அடித்திருப்பார். ஆனால் நான் வேரியேஷன் காட்டியதால் எனது நல்ல நேரம் அவர் அவுட்டானார். கோலிதான் இந்தியாவின் முதுகெலும்பு. நான் அவரின் ரசிகன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments