Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணுடன் ஏடாகூட செல்ஃபி - சர்ச்சையில் இலங்கை கிரிக்கெட் வீரர்

இளம்பெண்ணுடன் ஏடாகூட செல்ஃபி - சர்ச்சையில் இலங்கை கிரிக்கெட் வீரர்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (17:16 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குஷல் ஜனித் பெரேரா இளம்பெண் ஒருவருடன் கட்டிலில் இருப்பதைப் போன்ற புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 

 
இலங்கை அணியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுல் குஷல் ஜனித் பெரேரா. அவர், கிரிக்கெட்டில் புகழ்பெற்று வருவது போலவே, சர்ச்சையிலும் சிக்கி புகழ்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கட்டிலில் இளம்பெண் ஒருவருடன் இருப்பதை போன்று, அவர் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அந்தரங்க செல்ஃபி ஒன்று இணையத்தளங்களில் உலா வருகின்றது. படத்தைப் பார்த்த பலரும், இது குஷால் பெரேரா என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
webdunia

 
ஆனால், இதனை குஷல் பெரேரா மறுத்துள்ளார். அவர், இப்படத்தில் இருப்பது தான் எனவும் ஆனால் பெண்ணொருவருடன் இருப்பது போல கணனியின் ஊடாக இணைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இப்படத்தை இணைத்தவரை தான் அடையாளங் கண்டுகொண்டு உள்ளதாகவும், ஆனால், இணையத் தளங்களில் கசிய விட்டவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil