Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸர்களை பறக்க விட்ட சேவாக்: உறைபனியின் மேல் கிரிக்கெட் போட்டி!

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (17:48 IST)
சுவிட்சர்லாந்து நாட்டில் செயிண்ட் மோரிட்ஸ் நதியின் உறைபனியின் மேல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
 
செயிண்ட் மோரிட்ஸ் நதி அதிக உறைநிலையின் காரணமாக உறைந்துள்ளது. இந்த நதி 200 டன் எடையை தாங்கும் சக்தி கொண்டது. இங்கு கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஐஸ் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
 
அந்த உறைந்தபனியின் மீது மைதானம் அமைக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு போட்டிகள் நடைபெறும். அதில் இந்த ஆண்டு வீரேந்திர சேவக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியும், சாகித் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும் மோதின.
 
இந்த போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் பல முன்னாள் ஜாம்பவான்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டதால் அதிக முக்கியத்துவம் பெற்றது இது. மேலும் இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த சேவாக் 62 ரன்கள் குவித்தார். இதில் அவர் ஐந்து சிக்ஸர்களை பறக்க விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments