Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது… சஞ்சு சாம்சன் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (08:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில்தான் வங்கதேசத்துக்கு டி 20 போட்டியில் அவருக்கு இடம் கிடைத்து சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இனிமேல் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாதது குறித்து  அவர் பேசியுள்ளார். அதில் “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் விளையாட வாய்ப்புள்ளதாகவும் என்னைத் தயாராக இருக்கச் சொல்லியும் தகவல் வந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்கனவே விளையாடிய அணியே விளையாடட்டும் என முடிவெடுக்கப்பட்டது. டாஸுக்குப் பின்னர் ரோஹித் வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments