Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் பாக்குறது செம கடுப்பா இருக்கு! – சுட்டி குழந்தை சாம் கர்ரன் வேதனை!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:58 IST)
ஐபிஎல் சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வீட்டிலிருந்து அதை பார்த்து பொறுமையை சோதிப்பதாக சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் இருந்த சில வீரர்கள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தை என புகழப்படுபவருமான சாம் கர்ரன் காயம் காரணமாக இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடவில்லை

நேற்று சென்னை – லக்னோ அணி இடையே நடந்த போட்டியில் சென்னை அணி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐபிஎல்லில் பங்கேற்க இயலாதது குறித்து பேசியுள்ள சாம் கர்ரன் “வீட்டில் இருந்தபடி ஐபிஎல் தொடரை பார்ப்பது என்னை பொறுமை இழக்க செய்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments