Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டியில் சகா விளையாடுவார்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டியில் சகா விளையாடுவார்
, சனி, 1 நவம்பர் 2014 (10:50 IST)
இலங்கை அணிக்கு எதிராக நடக்கவுள்ள முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா பங்குபெறவுள்ளார்.
 
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நவ, 2 ஆம் தேதி நாளை நடக்கவுள்ளது. 
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.
 
மேலும் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பு விருத்திமான் சகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியிருந்த சகா இலங்கை தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. 
 
இந்நிலையில் சகா அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்துள்ளார். மேலும் முதல் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட சகா தயாராகவுள்ளதாக அணி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil