Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? – பிசிசிஐ விளக்கம்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (16:00 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சி அணிவதாக வெளியான செய்தி குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே சென்னையில் பயிற்சி ஆட்டத்தின் போது காவி நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி காவி ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த தகவல் குறித்து பிசிசிஐ கௌரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் பேசியபோது, 14ம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் – இந்தியா உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சியில் விளையாட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், முற்றிலும் ஆதாரமற்ற இது யாரோ ஒருவரின் கற்பனை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments