Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? – பிசிசிஐ விளக்கம்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (16:00 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சி அணிவதாக வெளியான செய்தி குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே சென்னையில் பயிற்சி ஆட்டத்தின் போது காவி நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி காவி ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த தகவல் குறித்து பிசிசிஐ கௌரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் பேசியபோது, 14ம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் – இந்தியா உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சியில் விளையாட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், முற்றிலும் ஆதாரமற்ற இது யாரோ ஒருவரின் கற்பனை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments