Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் வார்த்தைகள் உதவியது- முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (18:55 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி,  ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர்.. அந்த அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்  இப்ராஹிம் 129 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் திறமையான பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிர்க்கெட் வரலாற்றில் முதல் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் என்ற வீரர் என்ற பெருமையை  இப்ராஹிம் ஜத்ரான் பெற்றுள்ளார்.

மேலும், ‘’ நேற்று சச்சின் டெண்டுல்கரை சந்தித்தேன். அவருடைய வார்த்தைகள் எனக்க்கு பெரிதும் உதவியயது. அவர் 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்’’ என்று சதம் விளாசிய பின்னர் இப்ராஹிம் ஜத்ரான் கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments