பிசிசிஐயின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
2023 - 24ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச ஆண் வீரர் பாலி உம்ரிகர் விருதை ஜாஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச பெண் வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர். மேலும் கடந்த ஆண்டில் பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததற்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
1994 முதலாக வழங்கப்பட்டு வரும் வாழ்நாளை சாதனையாளர் விருதை பெறும் 31வது வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக வீரராக சர்பராஸ் கானுக்கும், ஆஷா ஷோபனாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K