Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தொடர்களில் இந்தியா சொதப்ப இதுதான் காரணம்… சபா கரீம் கருத்து!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:44 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகள் எதையும் வெல்லவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடும் இந்தியா முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்புகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதே இந்திய அணி முக்கியமான போட்டிகளில் தோற்பதற்குக் காரணமாக அமைகிறது என முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம். இதுகுறித்து அவர் “டாப் ஆர்டர்தான் நம்முடைய பலம். ஆனால் முக்கிய போட்டிகளில் அவர்கள் சொதப்புவதால் நாம் போட்டியை இழக்கிறோம். இந்திய அணி இப்போது அதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments