Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

Prasanth Karthick
வியாழன், 10 ஏப்ரல் 2025 (20:14 IST)

ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறும் நிலையில் இனி சிஎஸ்கே கேப்டனாக தோனி தொடர்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான நிலையிலேயே விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மும்பையை வென்ற பிறகிலிருந்து இதுவரை ஒரு வெற்றியும் பெறவில்லை

 

இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

கடந்த 2022ல் இதேபோல ஜடேஜாவை கேப்டனாக நியமித்தபோது அவர் தடுமாறினார். அதனால் தொடரின் பாதியில் கேப்டனாக பதவியேற்ற தோனி மீண்டும் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அந்த வகையில் ருத்துராஜ் தலைமையில் மோசமான நிலைக்கு சென்ற அணிக்கு கேப்டனாகும் தோனி, மீண்டும் அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments