Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (11:28 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டும் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் மும்பை அணி எடுத்த ஒரு தவறான முடிவுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அது என்னவென்றால் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனால் அவரை 19 ஆவது ஓவரில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே அனுப்பிவிட்டு, மிட்செல் சாண்ட்னரை இறக்கினர். இதுதான் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதே போட்டியில் ரோஹித் ஷர்மா செய்த ஒரு காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் டைம் அவுட்டின் போது நேற்றைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் ஷர்மா மைதானத்துக்குள் வந்து வீரர்களுக்கு சில அறிவுரைகளை சொல்லி சென்றார். அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே நிக்கோலஸ் பூரன் விக்கெட் ஆகி வெளியேறினார். ரோஹித்தின் இந்த செயல் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments