Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.. ஆனால்?- ரோஹித் ஷர்மா வருத்தம்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:37 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது. டிராவிட் நினைத்திருந்தால் அவர் பயிற்சியாளராக தொடர மீண்டும் விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் டிராவிட் குறித்து பேசும்போது, “நான் மீண்டும் டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நினைத்தேன். அதை அவரிடம் சொல்லவும் செய்தேன். ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். அவரோடு பணியாற்றிய காலத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில்  இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் புதிய பயிற்சியாளராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. விரைவில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments